என் மலர்

    சினிமா

    ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது: சிவகார்த்திகேயன்
    X

    ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது: சிவகார்த்திகேயன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி மலர் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணு தலைமை தாங்கினார். மலரை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் அழைத்துச் செல்லும் பாலமாக பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு பிறகு ‘ரெமோ’ வசூலில் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறது.

    இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்வோம். ரஜினி போன் செய்து என்னை வாழ்த்தினார். இதனால் எனது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

    இந்த வெற்றி என் ஒருவனால் வந்தது அல்ல. எல்லோருக்கும் பிடித்தமான படங்களை தந்து என் பெயரை காப்பாற்ற முயற்சி செய்வேன். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்” என்றார்.

    விழாவில் இயக்குனர்கள் பொன்ராம், விஜய்மில்டன், நடிகர் கிரிஷ், பாடலாசிரியர் உமா தேவி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×