என் மலர்

    சினிமா

    அனுஷ்கா சர்மாவின் முத்தக்காட்சிக்குள் பாய்ந்த சென்சார் கத்திரி
    X

    அனுஷ்கா சர்மாவின் முத்தக்காட்சிக்குள் பாய்ந்த சென்சார் கத்திரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்திருப்பதால் ரிலீஸ் விவகாரத்தில் சிக்கலை சந்தித்துள்ள ’ஏ தில் ஹே முஷ்கில்’ திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவின் முத்தக்காட்சியை பாதியாக குறைக்கும்படி சென்சார் போர்ட் வலியுறுத்தியுள்ளது.
    கரன் ஜோஹரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வரும் 28-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூரும், நாயகிகளாக ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவரான பவாத் கான் என்பவரும் இப்படத்தில் நடித்துள்ளதால் இந்தப் படத்தை திரையிட கூடாது என மஹாராஷ்டிர நிர்மான் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் இந்திப்பட ரசிகர்களிடையே மேலோங்கி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் அனுஷ்கா சர்மா - ரன்பீர் கபூர் இதழ் பதிக்கும் முத்தக்காட்சியின் நீளத்தை சரிபாதியாக கத்திரிக்கும்படி மும்பை சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளதாக ஆன்லைன் மூலம் வெளியாகியுள்ள இப்படத்தின் சென்சார் சான்றிதழின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×