என் மலர்

    சினிமா

    செக்ஸ் தொல்லை கொடுத்தாக புதுமுக டைரக்டர் மீது நடிகை அதிதி புகார்
    X

    செக்ஸ் தொல்லை கொடுத்தாக புதுமுக டைரக்டர் மீது நடிகை அதிதி புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓட்டலில் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புதுமுக டைரக்டர் மீது நடிகை அதிதி புகார் கூறி உள்ளார்.
    ‘நெடுநல் வாடை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் அதிதி. இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தை புதுமுக டைரக்டர் செல்வ கண்ணன் டைரக்டு செய்கிறார். ‘பட்டதாரி’ என்ற இன்னொரு படத்திலும் அதிதி நாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

    இந்த நிலையில் டைரக்டர் செல்வ கண்ணன் மீது அதிதி நடிகர் சங்கத்திலும், போலீசிலும் செக்ஸ் புகார் கூறி உள்ளார்.

    இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் விளம்பர படமொன்றில் அதிதி நடித்துக்கொண்டு இருந்தபோது செல்வ கண்ணன் அடியாட்களுடன் சென்று அவரை தாக்க முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறும்போது, “நடிகை அதிதி டைரக்டர் செல்வ கண்ணன் மீது டெலிபோனில் புகார் கூறினார். ஓட்டலில் தங்கி இருந்தபோது செல்வ கண்ணன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று தெரிவித்தார். அதிதி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. இந்த நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வந்தது. போலீசார் விசாரணை நடத்தியதால் மேற்கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடவில்லை” என்று கூறினார்.

    போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்ததாகவும் அவரவர் சங்கங்களில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    செக்ஸ் தொல்லை காரணமாக அதிதி நெடுநல்வாடை படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை அதிதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாட்ஸ் அப்களில் தகவல் பரவியது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. 
    Next Story
    ×