என் மலர்

    சினிமா

    தன்னை தொல்லை செய்யும் ரசிகர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு: டாப்சி
    X

    தன்னை தொல்லை செய்யும் ரசிகர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு: டாப்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    “என்னை பின் தொடர்ந்து ஒரு ரசிகர் தொல்லை கொடுக்கிறார். இதனால் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்” என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
    ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-2, வை ராஜா வை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிங்க் என்ற இந்தி படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ரசிகர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக டாப்சி புகார் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    “நான் ரசிகர்களை மதிக்கிறேன். அனைத்து நடிகர்-நடிகைகளும் ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ளனர். அதே நேரம் எங்களுக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் உள்ளன. எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையே ஒரு சிறிய எல்லைக்கோடு இருக்கிறது. அதை மீறுவது சிக்கலை ஏற்படுத்தும்.

    என்னை அடிக்கடி ஒரு ரசிகர் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறார். நான் படப்பிடிப்புக்கு போனாலும், ஷாப்பிங் போனாலும் அங்கெல்லாம் வந்து விடுகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது பாதுகாப்பை மீறி என் அருகே வந்து விட்டார். இது எனக்கு அதிர்ச்சி அளித்தது. லேசான அச்ச உணர்வும் ஏற்பட்டது. எனது வேலையை நான் மதிக்கிறேன். அதற்கு இடையூறு ஏற்படுத்துவது போல் ரசிகர்கள் நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது.

    அந்த ரசிகர் என்னை பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் செயலில் மீண்டும் ஈடுபட்டால் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்.”

    இவ்வாறு டாப்சி கூறினார்.
    Next Story
    ×