என் மலர்

    சினிமா

    கோடிகள் குவிந்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடியவில்லை: ஷாருக்கான்
    X

    கோடிகள் குவிந்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடியவில்லை: ஷாருக்கான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோடி கோடியாக குவித்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க சாப்பிட முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு ஷாருக்கான் கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் ஷாருக்கான் 8-வது இடத்தில் இருக்கிறார்.

    கோடி கோடியாக குவித்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு ஷாருக்கான் கூறிய வார்த்தைகள் இவை...

    “எனக்கு பணம் கோடி கோடியாக சேருகிறது. உலகம் முழுவதும் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் குடும்பத்துடன் நான் சேர்ந்து இருக்க முடியவில்லை.

    குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற சின்ன ஆசை கூட, சினிமாவுக்கு வந்த பிறகு நிறைவேறாமல் போய் விடுகிறது. நான் குடும்பத்துக்கு எத்தனையோ ஏமாற்றங்களை கொடுத்திருக்கிறேன். அதற்காக ஒரு போதும் அவர்கள் என்னை குறை சொன்னதில்லை.

    இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுடைய உழைப்பு, சம்பாத்தியம், பெயர், புகழ் எல்லாம் அவர்களுடைய குடும்பத்துக்கு தான் சொந்தம். நான் உழைப்பதும் என் குடும்பத்துக்குத்தான். ஆனால் நடிப்பு என் வாழ்க்கையின் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டு விட்டது” என்றார்.
    Next Story
    ×