சினிமா
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மிஷ்கினுடன் இணையும் பிரசன்னா
பிரசன்னா 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு நரேன், விஜயலட்சுமி, அஷ்மல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘அஞ்சாதே’. இப்படத்தில் பிரசன்னா வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் பிரசன்னா வில்லனாகவே நடிக்கவிருக்கிறாராம். ‘துப்பறிவாளன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷால், ராகுல் பிரீத் சிங் நடிப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தில் அரோல் குரலி இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் பிரசன்னா வில்லனாகவே நடிக்கவிருக்கிறாராம். ‘துப்பறிவாளன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷால், ராகுல் பிரீத் சிங் நடிப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தில் அரோல் குரலி இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story