என் மலர்

    சினிமா

    பாபி சிம்ஹாவுக்கு வில்லனான பிரசன்னா
    X

    பாபி சிம்ஹாவுக்கு வில்லனான பிரசன்னா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாபி சிம்ஹாவுக்கு வில்லனாக பிரசன்னா நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.

    2006-ல் வெற்றி பெற்ற படம் ‘திருட்டுப்பயலே’. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய இந்த படத்தின் அடுத்த பாகம் ‘ திருட்டுப்பயலே-2’ என்ற பெயரில் தயாராகிறது.

    இதில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். பிரசன்னா வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுபற்றி கூறிய சுசிகணேசன், “பத்து வருடத்துக்கு முன்னால் இருந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக்காணோம். சிறுசிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு காரணம்” என்றார்.

    முதல் பாகத்தின் பெரும் பகுதி ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘திருட்டுப்பயலே-2’ க்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக்கொண்ருக்கிறார்கள். பெரும் பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    Next Story
    ×