என் மலர்

    சினிமா

    350 படங்களில் நடித்து சாதனை படைத்த ஸ்ரீபிரியா
    X

    350 படங்களில் நடித்து சாதனை படைத்த ஸ்ரீபிரியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
    தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.

    தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக' உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.

    ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.

    பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.

    ஜெமினி தயாரித்த "மூன்று பிள்ளைகள்'' படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.

    `ஸ்ரீபிரியா' என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.

    டைரக்டர் பி.மாதவன் இயக்கிய "முருகன் காட்டிய வழி'' என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த "திருவிளையாடல்'' படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.

    அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "அப்போது எனக்கு 6 வயது இருக்கும். `திருவிளையாடல்' படத்தில் பாலமுருகனாக நடிக்க சிறுவர்- சிறுமி தேவை என்று, `தினத்தந்தி'யில் விளம்பரம் வந்திருந்தது. என் பெரியப்பா, அந்தப் படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் என்னிடம் "பாலமுருகனாக நடிக்க ஆலு (ஸ்ரீபிரியா) நீ வேணும்னா முயற்சி பண்ணேன்'' என்றார்.

    பெரியப்பா இப்படிச் சொன்னதும், எனக்கும் ஆசை வந்துவிட்டது. நடிக்கும் ஆசை அல்ல; சினிமாவில் நடிக்கப்போனால் ஸ்கூலுக்கு லீவு போடலாமே என்ற ஆசைதான்!

    முருகனாக நடிப்பதற்காக அம்மா என்னை அழைத்துப்போனார். அங்கே போனால், என் வயதில் சுமார் 200 பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் `மேக்கப் டெஸ்ட்' நடந்தது. அதில் என்னை மட்டுமே தேர்வு செய்தார்கள். என்னிடம் ஒரு வசனத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார்கள்.

    அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது! நான் படித்த `சர்ச் பார்க்' கான்வென்டில் ஆங்கிலம்தான் பிரதானம். அதோடு நான் சிறப்புப்பாடமாக இந்தியை எடுத்திருந்தேன்.

    எனக்கு, தமிழ் தெரியாவிட்டாலும் வசனத்தை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

    பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மலைக்குப்போன முருகனை அவ்வையார் சந்தித்து, சாந்தப்படுத்த முயற்சிக்கிற காட்சி அது.

    முருகன் தங்கியிருக்கும் மலைக்கு அவ்வையார் சென்று, "முருகா! ஞானபண்டிதா!'' என்று அழைக்க, பதிலுக்கு முருகன், "ஓ அவ்வையா!'' என்று கேட்க வேண்டும்.

    இந்தக் காட்சி பற்றி விளக்கி எனக்கான வசனத்தையும் சொல்லிக் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள். அது ஒத்திகை என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. என் நடிப்பு டைரக்டர் ஏ.பி.நாகராஜனுக்கு பிடித்துப்போக, மறுநாள் வருமாறு சொன்னார்கள். `கார் வரும்' என்றார்கள்.

    மறுநாள் காரும் வரவில்லை; அழைப்பும் வரவில்லை. என்ன நடந்தது என்று போய்ப்பார்த்தால், நான் நடிக்க வேண்டிய அந்த பாலமுருகன் வேடத்தில் இன்னொரு பெண் நடித்துக் கொண்டிருந்தாள்! பிறகுதான் அந்த பாலமுருகன் வேடத்துக்கு, சிவாஜி சார் சிபாரிசு செய்த பெண்ணைப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

    பின்னாளில் நான் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்தபோது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து "நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். அதில் 9 கதாநாயகிகளில் நானும் இருந்தேன். இந்தப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது, ஏ.பி.நாகராஜனிடம் "சார்! நான் படத்தில் நடித்த இந்தக்காட்சி இருக்குமா? அல்லது திருவிளையாடல் படத்தில் `ஓ.கே' பண்ணிய பிறகு என்னை விலக்கியது மாதிரி இதிலும் செய்து விடுவீர்களா?'' என்று விளையாட்டாகக் கேட்டேன். அவரோ, பதறியபடி, "என்னம்மா நீ! சின்ன வயதில் நடந்ததைக் கூடவா இப்படி நினைவில் வைத்திருப்பாய்!'' என்று சொன்னார்.

    ஸ்ரீபிரியா எட்டாவது படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நடன நிகழ்ச்சிகளை பிரபல `ஸ்டில் போட்டோகிராபர்' நாகராஜராவ் படம் எடுத்தார். விழாவைப் பார்க்க வந்த ஸ்ரீபிரியா நாகராஜராவ் எடுத்த படங்களில் விழுந்திருந்தார்.

    படங்களை நாகராஜராவ் பிரிண்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருந்தபோது, டைரக்டர் பி.மாதவன் அங்கு வந்தார். தற்செயலாக ஸ்ரீபிரியாவின் படத்தைப் பார்த்த மாதவன் `நாம் எடுக்கும் படத்துக்கு இந்தப்பெண்ணும் சரியாக இருப்பாள்' என்று நினைத்தார். அன்று மதியமே ஸ்ரீபிரியா படித்த சர்ச்பார்க் பள்ளிக்கு சினிமா கம்பெனி கார் போயிற்று.

    "அப்போது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் கிடையாது. ஏற்கனவே சிறு வயதில் ஏற்பட்ட சினிமா அனுபவம், `அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு' என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருந்தது. அதோடு அப்போது ஸ்கூலில் `த்ரோபால்', `நெட்பால்' என்று விளையாட்டுகளில் `நம்பர் ஒன்'னாக இருந்தேன். என் `ஸ்போர்ட்ஸ்' ஆர்வம் என்னை `கேம்ஸ் டீச்சர்' ஆகவேண்டும் என்ற கனவில் வைத்திருந்தது. இப்படியிருக்கும்போது, தேடி வந்த நடிப்பு வாய்ப்பை ஏற்கத் தயங்கினேன்'' என்று கூறுகிறார், ஸ்ரீபிரியா.

    ஆனால் அவர் தாயாரோ, "மாதவன் சார் பெரிய டைரக்டர். நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதை நேரில் போய் சொன்னால்தான் மரியாதை'' என்று சொல்ல, அம்மாவுடன் போய் டைரக்டர் மாதவனை பார்த்தார்.

    மாதவன் அப்போது கதாசிரியர் பாலமுருகன் தயாரித்த "மாணிக்கத் தொட்டில்'' என்ற படத்தை டைரக்ட் செய்ய இருந்தார். அதில் ஜெமினிகணேசனின் 5 மகள்களில் ஒருவராக ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கும் முடிவில்தான் அழைத்திருந்தார். எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்க விரும்பிய ஸ்ரீபிரியா, "5 பேரில்  ஒருவராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறினார்.

    "பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற வெற்றிப்படத்தை மாதவன் இயக்கியிருந்த நேரம் அது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. "அப்படி ஒரு படத்தை தயாரிக்கும்போது, அழைப்பு அனுப்புகிறேன்'' என்று கூறினார், மாதவன். சொன்னதைச் செய்தார்.

    Next Story
    ×