என் மலர்

    சினிமா

    பிரபல டைரக்டர்கள் பற்றி விஜயகுமார் பேச்சு
    X

    பிரபல டைரக்டர்கள் பற்றி விஜயகுமார் பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் உடைய விஜயகுமார், அநேகமாக எல்லா டைரக்டர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
    திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் உடைய விஜயகுமார், அநேகமாக எல்லா டைரக்டர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

    அந்த டைரக்டர்களுடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-

    ஒரு கதையை எப்படி படமாக்குவது என்பதை, இன்றைய இளம் இயக்குனர்கள்வரை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவரது இயக்கத்தில் நான் நடித்த "அழகே உன்னை  ஆராதிக்கிறேன்'' படத்திலேயே ரசிகர்களின் நாடித்துடிப்பை எந்த அளவுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. காதல் உணர்வுகளை திரையில் இத்தனை அழுத்தமாக பதிவு செய்தவர்கள் வேறு எவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

    இவர் டயலாக் சொல்லித் தரும்போதே நமது கேரக்டரை நமக்குள் விதைத்து விடுவார். சிறியவர்களைக்கூட `நீங்க... வாங்க...' என்று மரியாதையுடன் அழைப்பார்.

    இந்தியா - இலங்கை கூட்டுத் தயாரிப்பாக சிவாஜி நடித்த "பைலட் பிரேம்நாத்'' படத்தை ஒரு டைரக்டருக்கான எந்த டென்ஷனும் இல்லாமல் இவர் இயக்கியதை பார்த்து வியந்திருக்கிறேன். நானும் ரஜினியும், ஸ்ரீதேவியும் நடித்த "வணக்கத்துக்குரிய காதலியே'' படத்தையும்

    இயக்கினார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பிரபலங்களை இயக்கியவர், என் போன்ற அந்நாளைய புதுமுகங்களை இயக்கும்போதும் தனக்கே உரிய அவையடக்கத்துடன்தான் காணப்படுவார். புதுமை விரும்பியான இவரது படங்களில் புதுமையான விஷயங்களை ஆர்வத்துடன் வெளிப்படுத்துவார். எம்.ஏ. முதுகலைப் பட்டதாரியான இவர், எப்போதும் எங்களிடம் சொல்லும் வாசகம்:   "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு.''

    நான் அதிகப் படங்களில் நடித்திருப்பது இவரது இயக்கத்தில்தான். "செந்தமிழ்ப்பாட்டு'' படத்தின் வெற்றி விழாவில் இவர் பேசும்போது, "மறைந்த குணசித்ர நடிகர் எஸ்.வி.ரெங்காராவின் இடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் யாரும் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தது. விஜயகுமாரின் நடிப்பை பார்த்த பிறகு அந்தக் கவலை நீங்கி விட்டது. குணசித்ர நடிப்பில் எஸ்.வி.ரெங்காராவை கண்முன் நிறுத்துகிறார்'' என்று இவர் பாராட்டியபோது, நெகிழ்ந்து போனேன்.

    "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. அவுட்டோரில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் டைரக்டர் பி.வாசுவுக்கு பக்கத்து ரூம் என் ரூமாக இருக்கும். படத்தில் என் கேரக்டர் பற்றி அன்றைய இரவு தூங்கப்போகும் நேரத்தில் அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டேன். உடனே சிறு குழந்தை போல உற்சாகமானவர், படத்தின் முழுக்கதையையும் காட்சி வாரியாக சொல்லத் தொடங்கி விட்டார். "தூக்கம் கெட்டு விடுமே. நாளை படப்பிடிப்பு பாதிக்குமே'' என்றெல்லாம் எண்ணாமல், நம்மிடம் சந்தேகம் கேட்பவரின் சந்தேகம் தீரவேண்டுமானால் முழுக்கதையையும் சொல்வதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தாரே,  இந்த முன்னோக்குப் பார்வைதான் அவரது வெற்றிக்கு காரணம்.

    "சின்னத்தம்பி'' இவரது இயக்கத்தில் மாபெரும் வெற்றிப் படம். இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை, ஒருமுறை நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது விளையாட்டாக குறிப்பிட்டு விட்டேன். அதற்கு அவர், "விஜயகுமார் சார்! உங்களுக்கு தருகிற மாதிரி அதில் கேரக்டர் இல்லை'' என்று சொன்னார். நானும் விடவில்லை. ஒரு படத்தின் கதையை உருவாக்கும் படைப்பாளி நீங்கள். உங்களுக்கு எனக்கும் ஒரு கேரக்டர் வைத்து கதை தரமுடியாதா?'' என்று கேட்டேன்.

    நான் இப்படிக் கேட்டதுகூட விளையாட்டு ரீதியில்தான். ஆனால் அவரோ அதை சீரியாசாக எடுத்துக் கொண்டு அடுத்து உருவாக்கிய கதைகளில் எனக்கும் ஒரு கேரக்டர் வருகிற மாதிரி பார்த்துக் கொண்டார். கதைக்குள் வாழ்கிற இயக்குனர் என்று தாராளமாக இவரைச்  சொல்லலாம்.கே.எஸ்.ரவிக்குமார்

    "புதுவசந்தம்'' படத்தில், டைரக்டர் விக்ரமனிடம் அசோசியேட்டாக இருந்தபோதே இவரை எனக்குத் தெரியும். ஒரு நட்சத்திர தம்பதிகள், சிறந்த ஜோடியை தேர்வு செய்கிற மாதிரி ஒரு காட்சி அந்தப் படத்தில் இருந்திருக்கிறது. இதற்காக என்னை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார், "நட்சத்திர தம்பதிகளாக நீங்களும், மஞ்சுளா மேடமும் படத்தில் தோன்ற முடியுமா?'' என்று கேட்டார். கதையின் முக்கியத்துவம் கருதி ஒப்புக்கொண்டு நடித்தும் கொடுத்தோம்.

    இதற்கான படப்பிடிப்பு, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் நடந்தது. அப்போதுதான் தயாரிப்பு நிர்வாகியாக சினிமாவுக்குள் வந்து இப்போது விக்ரமனிடம் இணை இயக்குனராகி இருப்பது தெரிய வந்தது. நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து கலை ஆர்வத்தில் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

    ஒரு சினிமாவில் தயாரிப்பு நிர்வாகம் என்பது ரொம்ப முக்கியமானது. தயாரிப்பு நிர்வாகம் சரியாக அமைந்தால் எல்லாமே சரியாக இயங்கும். ஒரு தயாரிப்பாளருக்கு உரிய நடைமுறை சிரமங்கள் இந்தப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியும் என்பதால், இவர்களே இயக்குனர் பொறுப்புக்கு வரும்போது தேவையற்ற செலவுகள் இன்றி குறித்த பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்து விடமுடியும்.

    ஆலிவுட்டில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோவுக்கு சினிமா பற்றி தெரிந்து கொள்ள போகிறவர்களுக்கு, முதலில் அவர்கள் "தயாரிப்பு நிர்வாகம்'' குறித்தே விளக்கம் தருகிறார்கள். தயாரிப்பு நிர்வாகம் சரியாக அமைந்தால், எடுக்கப்போகிற படம் சரியாக அமைந்து விடும். இந்த தயாரிப்பு நிர்வாகப் பின்னணி தெரிந்த இயக்குனரை, யாரும் ஏமாற்றி விடமுடியாது.

    இப்படி தயாரிப்புத்துறை பற்றி அக்குவேறு ஆணிவேறாக அவர் தெரிந்து வைத்திருப்பதுதான், சினிமாவில் அவருக்கான இடத்தை நிலையாக வைத்திருக்கிறது.

    சேரன் பாண்டியன் படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, "சார்! நான் மந்தைவெளியில்  இருந்தபோதே உங்களை பார்த்திருக்கிறேன். மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள்'' என்றார்.

    "சேரன் பாண்டியன்'' படத்தில், அவரது திட்டமிட்ட இயக்கம் என்னைக் கவர்ந்தது. அதனால் ரஜினியிடம், "ஒரு நல்ல டைரக்டர் இருக்கிறார். ரொம்ப பாஸ்ட்! அதே அளவுக்கு குவாலிட்டி! இவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றேன்.

    இதன் பிறகு ரஜினி நடிக்கும் "முத்து'' படத்தை ரவிக்குமார் இயக்குகிறார் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது.

    ரவிக்குமாரின் படம் இயக்கும் நேர்த்தி ரஜினியையும் கவர, கமல் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி அதை மேடையிலேயே வெளிப்படையாக பேசினார். "என் படத்தை இயக்கி வரும் ரவிக்குமார் திட்டமிட்டு பணியாற்றும் மிகச்சிறந்த இயக்குனர். `உங்கள் படத்தில் ரவிக்குமாரை போடுங்கள்' என்று எனக்கு விஜயகுமார்தான் சொன்னார். அவர் சொன்னதை ரவிக்குமாரும் நூற்றுக்கு நூறு உறுதிப்படுத்தியிருக்கிறார்'' என்று பாராட்டினார்.

    நான் நடிக்க வந்த புதிதில் வியந்த இயக்குனர்களுள் ஒருவர் எஸ்.பி.முத்துராமன். ஒரு இயக்குனரின் வெற்றி என்பது, அவரது நல்ல அணுகுமுறையிலும் இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர வைத்தவர்.

    இவரது இயக்கத்தில் "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'', "மயங்குகிறாள் ஒரு மாது'', "மோகம் முப்பது வருஷம்'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.

    இன்றைக்கு `தயாரிப்பாளர்களின் இயக்குனர்' என்ற பட்டியலில் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் போன்றோர் இருந்தாலும், இவர்களுக்கு முன்னோடி எஸ்.பி.எம். அவர்கள்தான். `டென்ஷனே' இல்லாமல், நேர்த்தியாக நடிகர்களை வேலை வாங்கும் இவர், புதிய இயக்குனர்களின் படைப்புக்களையும் பார்த்து பாராட்டும் பண்பு கொண்டவர்.

    என் மகளை மணந்தவர் என்ற முறையில் ஹரி, என் மாப்பிள்ளை. ஆனால் படத்தில் நான் நடிகன்; அவர் இயக்குனர். "சாமி'', "தாமிரபரணி'' என இவரது இயக்கத்தில் 2 படங்களில் நடிக்க வைத்திருக்கிறார்.

    `சுறுசுறுப்பு' இவரது பலம். காட்சிகளை விவரிக்கும்போது, இவரது `முகபாவம்' மூலமே அந்த கேரக்டரை தெரிந்து கொண்டுவிட முடியும். என் நண்பர்கள் பலரும், "மருமகன் படங்களில் அதிகம் நடிப்பதில்லையா?'' என்று கேட்பதுண்டு. `நானும் சிபாரிசு மூலம் வாய்ப்பு தேடுவதில்லை. அவரும் எனக்கான கேரக்டர் இருந்தால் மட்டுமே வாய்ப்பு தருவார்'' என்று அவர்களிடம் பதில் சொல்லியிருக்கிறேன்.''

    Next Story
    ×