என் மலர்

    சினிமா

    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது
    X

    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.
    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.

    தலைப்பிரசவ அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜீவாவுக்கு மூன்று மாதம். டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டும், செக்கப் செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குத்

    தோன்றவில்லை."தோன்றவில்லை'' என்றில்லை; எனக்குத் தெரியாது!

    அம்மாதான் இருக்கிறார்களே! அவர்களுக்குத் தெரியாதா? கவனித்துக் கொண்டார்கள். இருந்தாலும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜீவாவே செய்து வந்தாள்.

    நான் எப்போதும் போல் கம்போசிங், ரெக்கார்டிங், மிïசிக் எழுதுவது என்றிருந்தேன்.

    ஜீவாவுக்கு மகப்பேறு நேரம் வந்தது. அவளுக்கு வலி எடுத்தது. அது பிரசவ வலி என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று.

    அம்மா, கலாவின் வீட்டுக்கு போயிருந்தார்கள். நான்தான் வீட்டில் இருந்தேன்.

    "வலிக்கிறது'' என்றாள், ஜீவா. "என்ன செய்யவேண்டும்?'' என்று நான் கேட்க, "ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும்'' என்றாள்.

    "சரி'' என்று கூறிவிட்டு, ரிக்ஷா ஒன்றை அழைத்து வந்தேன். அவளே அதில் ஏறினாள்; அவளே கல்யாணி ஆஸ்பத்திரிக்குப்போனாள்; அவளே `அட்மிட்' ஆனாள்!

    "கூட யாரும் வரவில்லையா?'' என்று ஆஸ்பத்திரியில் கேட்டிருக்கிறார்கள். "இல்லை'' என்று இவள் கூற, அட்மிட் செய்து கொண்டார்கள்.

    என் மனைவி - என் வாழ்க்கைத்துணை, பிரசவ வலி எடுத்தபோது, `எல்லோருக்கும் ஏற்படுவதுதான் போலிருக்கிறது' என்று மிகவும் சாதாரணமாக எண்ணிய மூடன்!

    `பாவம், எப்படி தனியாகப் போவாள்? இடையில் ரிக்ஷாவில் போகும்போது வலி அதிகமாகி வேறு ஏதாவது

    ஆகிவிட்டால்...' என்றுகூட எண்ணாத கொடியவன்!

    - இப்படியெல்லாம் என்னைப்பற்றி இப்போது எண்ணத் தோன்றுகிறதே தவிர, அப்போது ஒன்றும் தோன்றவில்லை.

    ஜீவாவுக்கு குழந்தை பிறந்தது.

    அம்மா, பாஸ்கர் எல்லோரும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். நானும் போய்ப் பார்த்தேன்.

    பச்சை உடம்போடு வீட்டுக்கு வந்தாள் ஜீவா. பிஞ்சுக் குழந்தை கைகளையும், கால்களையும் ஆட்டுவது, அழு வது, மழலைக் குரல் கேட்பது - இதெல்லாம் விவரிக்க முடியாத விஷயங்கள்தான்.

    பிரசவம், தாய் வீட் டில் நடப்பதுதான் வழக்கம். நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்பதால், அது ஒரு விஷயமாக எண்ணிப் பார்க்கப்படவில்லை. இப்போது குழந்தை பிறந்து விட்டது. இந்த நேரத்தில் ஜீவா பிறந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று அக்கா, அத்தான் எல்லோரும் விரும்பியதால், அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

    ஜீவாவையும், குழந்தையையும் பாஸ்கர், பண்ணைபுரத்தில் கொண்டு போய் விட்டு வந்தார்.

    அப்போது, இந்த "ராஜா தி கிரேட்''டுக்கு உடன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் "ராஜ்யம்'' எப்படி நடக்கும்!

    மூன்று மாதம் கழித்து, அழைக்கப் போகவேண்டும் அல்லவா? அப்போதும் இந்த "ராஜா தி கிரேட்'' போகவில்லை! போனால் "ராஜ்யம்'' கவிழ்ந்து விடும் பாருங்கள்!

    பாஸ்கர்தான் போய் ஜீவாவையும், குழந்தையையும் அழைத்து வந்தார்.

    மதுரையில், அண்ணன் பாவலரிடம் குழந்தையைக் காட்டியிருக்கிறார்கள். குழந்தையை கையில் எடுத்து, அப்படியே வெகுநேரம் அண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று பாஸ்கர் கூறினார்.

    என் தாய்க்கு நான் நல்ல மகனா? என் மனைவிக்கு நல்ல கணவனா? உடன் பிறந்தார்க்கு நல்ல சகோதரனா?

    நானல்லவோ பாரதியார் பாடாத வேடிக்கை மனிதன்!

    குழந்தையின் ஜாதகத்தைக் கணித்து, இரண்டு மூன்று பெயர்களை பாஸ்கர் சொன்னார்.

    "கார்த்திக்'' என்ற பெயரை நான் தேர்ந்தெடுத்தேன்.

    அப்போது நான் வாங்கியிருந்த புது சவுண்ட் சிஸ்டத்தில், புதிய இசைத்தட்டுகளை காலை 4 மணிக்கே எழுந்து போடுவேன். மெதுவாக சத்தத்தை குறைத்து வைத்து இசைத்தட்டுகளைப் போடுவேன். எல்லாம் கார்த்திக்கிற்காகத்தான்!

    இப்படி அதிகாலையிலும், பிறகு நேரம் இருக்கும்போதும், இரவு 10 மணிக்கு மேலும் இசை ஒலிக்கும். அந்த இசைத்தட்டில் இசைத்தவர்களும், கம்போஸ் செய்தவர்களும் வந்திருந்து கவனிப்பார்கள். ரசித்து, ரசித்து, அவர்களை நேசிக்கும் என்னையும், என் குழந்தையையும் ஆசீர்வதித்துப் போவார்கள்.

    அந்த இசையைக் கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். நம் நாட்டில் எத்தனை பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் இதற்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள்?

    இசை இல்லாத இவர்கள் வாழ்வு - வறண்ட பாலை!

    கார்த்திக் குழந்தையாக இருக்கும்போதே இந்த இசையைக் கேட்கிறான். எனக்கு இந்த இசையை கேட்க 30 ஆண்டுகள் அல்லவா ஆகியிருக்கிறது! பியானோவை பார்க்கவே எனக்கு 27 ஆண்டுகள் ஆயிற்றே! கார்த்திக் பிறந்த மூன்று மாதத்திலேயே இசையைக் கேட்கிறானே!

    ஜி.கே.வெங்கடேஷ் மிïசிக் கம்போஸ் செய்யும்போது ஓய்வு கிடைத்தால், பழைய பாடல்களின் உயர்தரமான அமைப்புகளை விளக்குவார்.

    அவர் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு வீணை வாசித்தவர்.

    எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "மீரா'' உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், எஸ்.வி.வெங்கட்ராமன்.

    மீரா படத்தில் ஒரு காட்சி. ஒட்டகத்தின் மீது போய்க்கொண்டே எம்.எஸ். ஒரு பாட்டு பாடுவார்.

    இதற்கு இசை அமைக்கும் முன், உயிரியல் பூங்காவுக்கு ("ஜு'') வெங்கட்ராமன் சென்றார். அங்கு காசு கொடுத்து ஒரு ஒட்டகத்தின் மீது சவாரி செய்தார். ஒட்டகம் நடந்த நடையை தாள கதியாக வைத்து, மிïசிக் கம்போஸ் செய்தார் என்று சொல்வார், ஜி.கே.வி.

    "சிலையே நீ என்னுடன் பேசவில்லையோ?'' என்ற பாடலை ஜீ.கே.வி. பாடினால் மிக அழகாக இருக்கும்.

    பாலுவுக்கு சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்புகள் வந்தன.

    ஏற்கனவே என் கல்யாணத்துக்கு வராவிட்டால், நட்பு பொய்யாகிவிடும் என்று ப Öலுவிடம் சொல்லியிருந்தேன். அவன் வராததால், எனக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்தாலும் சிங்கப்பூர் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

    என்னை சமாதானப்படுத்த, வைத்தியை பாலு என்னிடம் அனுப்பி வைத்தான். நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.

    அவர்கள் சிங்கப்பூர் போனார்கள்; வந்தார்கள். அதுபற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    ஒரு சாதாரண வாத்தியக் கலைஞனுக்கு, முதன் முதலாக "வெளிநாட்டுப் பயணம்'' போக வாய்ப்பு வந்தால் அதைத் தவற விடுவானா? ஆனால், நான் தவறவிடுவேன்! அது எனக்குப் பெரிதில்லை. மரியாதையும், ஒழுங்கும், பண்பும்தான் முக்கியம்!

    Next Story
    ×