என் மலர்

    சினிமா

    பாரதிராஜாவுடன் சென்ற போது ஏற்பட்ட அனுபவம்
    X

    பாரதிராஜாவுடன் சென்ற போது ஏற்பட்ட அனுபவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடன் இளையராஜா சென்றார்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடன் இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``சென்னையில் சபையர் தியேட்டரில் ``கிளியோ பாட்ரா'' ரிலீஸ் ஆகியிருந்தது. எப்படியாவது அந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று 2 முறை முயற்சி செய்தும், டிக்கெட் கிடைக்காமல் திரும்பி விட் டோம்.

    அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை, முன்னதாகவே சென்று `கிï'வில் நின்று, டிக்கெட் வாங்கி படத்தைப் பார்த்து விடுவது என்று முடிவு

    செய்தோம்.காலை எட்டு மணிக்கே கிளம்பி விட்டோம். பஸ் பிடித்து சபையர் ஸ்டாப்பில் இறங்கினோம். இன்னும் `கேட்' திறக்கவில்லை.

    `சரி, டிபன் சாப்பிட்டு விட்டு வருவோம். நேரம் சரியாக இருக்கும்' என்று தீர்மானித்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றோம்.

    கிளியோ பாட்ரா பார்க்கப் போகிறோம் என்பதால், எல்லோரும் நல்ல மூடில் இருந்தோம். ஜோக் அடித்துக் கொண்டே `ஆர்டர்' கொடுத்தோம்.

    `சரி, சரி! இவ்வளவு ஆர்டர் கொடுத்து விட்டோமே. பணம் குறைந்தால், யாரய்யா மாவாட்டுவது!' என்று கிண்டல் செய்து

    கொண்டிருந்தோம்.டிபன் வந்தது. நன்றாகச் சாப்பிட்டோம்.

    பில்லை வாங்கிக் கொண்டு, எங்கள் `நிதி மந்திரி' பாஸ்கர், பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டார். அவர் முகம் மாறியது.

    அதை கவனித்த பாரதி ராஜா, சிரித்துக் கொண்டே, `டேய்! காசு இல்லேண்ணு நடிக்காதே! போய் பணத் தைக் கொடு!''

    என்றார்.பாஸ்கரின் முகம் மாறவில்லை. இறுக்கமாகவே இருந்தது. ``யோவ்! காசு இருந்த பேண்ட்டுக்கு பதிலா, வேறு பேண்ட்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன்யா!'' என்றார்.

    இப்போது பாரதியின் முகம் சீரியசாக மாறியது. சுற்றும் முற்றும் பார்த்தார். நிறைய கூட்டம். நேராக கேஷியர் உட்கார்ந்திருந்த கல்லாவுக்கு போனார். பாஸ்கரிடம் இருந்த பில்லைப் பிடுங்கி, தான் போட்டிருந்த கைக்கெடிகாரத்தைக் கழற்றி இரண்டையும் கேஷியரிடம்

    கொடுத்தார்.``பணத்தை மறந்து வைத்து விட்டு வந்து விட்டோம். இந்த வாட்சை வைத்துக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்கிறோம்'' என்றார்.

    கேஷியர் நல்லவர். சரி என்று தலையை ஆட்டினார். வெளியே வந்ததும், பாஸ்கரைத் திட்டிய பாரதி, பணத்தைக் கொண்டு வருமாறு விரட்டினார். அங்கேயே காத்திருந்தோம். சிறிது நேரத்தில் பணம் வந்து சேர்ந்தது.

    பணத்தை கேஷி யரிடம் கொடுத்து, கெடிகாரத்தை மீட்டோம். இதற்குள் நேரம் ஆகி விட்டதால் அன்றைக்கும் கிளியோ பாட்ரா படத்தைப் பார்க்க முடியவில்லை.

    பின்னர், ஒரு தடவைக்கு மூன்று தடவை கிளியோ பாட்ராவைப் பார்த்தோம்''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    மெட்டுகளை மனதிலேயே பதிவு செய்து கொண்டு, பின்னர் அதை அப்படியே பாடக்கூடிய அபூர்வ ஆற்றலை சின்ன வயதிலேயே பெற்றிருந்தார், இளையராஜா. இந்த ஆற்றலைக்கண்டு வியந்து போற்றிய ஜி.கே.வெங்கடேஷ், பின்னொரு சமயம் இளையராஜா வாசித்த இசையை ஏற்காமல் கேலி செய்தார்.

    இந்த சம்பவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``ஒருநாள் ஜி.கே.வி. இசை அமைப்பில் ஒரு கன்னடப்படத்தின் பாடல் பதிவாக இருந்தது.

    காலை 7 மணிக்கு, விஜயாவாகினி கார்டனில் ஜி.கே.வி. யுடன் கம்போசிங் குழுவினர் உட்கார்ந் திருந்தோம். பாடலுக்கு முன் தொடங்கும் இசையை கம்போஸ் செய்ய வேண்டும்.

    இசைக்குழுவில் இருந்த வைத்தி, முயற்சி செய்து ஒரு இசையைப் போட்டார். அது நன்றாக இல்லை என்று ஜி.கே.வி. சொன்னார்.

    பிறகு ஜி.கே.வி. ஏதோ, சொல்ல வாத்தியக் காரர்கள் நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வாசித்தார்கள். அதுவும் நன்றாக இல்லை என்று கூறி விட்டார்.

    இப்படி நேரம் போய்க் கொண்டு இருந்தது. நான், `அண்ணா! எனக்கொரு ஐடியா! மிïசிக் கொடுக்கவா?'' என்றேன்.

    வைத்தியை  ஜி.கே.வி. அழைத்தார். ``டேய்,  வைத்தி! நம்ம ராஜா ஏதோ மிïசிக் கொடுக்கிறானாம், போய் கொடுத்து வாசிக்கச் சொல்லு'' என்றார்.

    நானும் இசைக் குழுவினருக்கு நோட்ஸ் கொடுத்து, வாசிக்கச் செய்து காட்டினேன்.

    அதுவும் ஜி.கே.வி.க்கு பிடிக்கவில்லை.

    அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வைத்தியை அழைத்து, ``டேய், பாருடா இவனை!'' என்று என்னை சுட்டிக் காட்டி சிரித்தார்.

    பிறகு, 555 சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகைத்தபடியே, ``டேய்! இதெல்லாம் பெரிய விஷயம். அவ்வளவு ஈசியா வந்திடுமா? அந்த இடத்துக்கெல்லாம் நீ இன்னும் வரலை!'' என்று என்னைப் பார்த்து உரத்தக்குரலில் சொல்லி, சிகரெட் பாக்கெட்டை ஆர்மோனியத்தின் மீது `டக்' கென்று போட்டார்.

    இசைக்குழுவினர் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு உடம்பே கூனிக் குறுகி கூசியது.

    அப்போதே நான் ஓர் முடிவுக்கு வந்தேன். எந்த ஐடியா எனக்குத் தோன்றினாலும், அதை ஜி.கே.வியிடம் சொல்லக்கூடாது; உதவவும் கூடாது. எனக்கு இசை அமைக்க சந்தர்ப்பம் வந்தாலும், உதவிக்காக யாரையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் தீர்மானித்தேன்.

    Next Story
    ×