என் மலர்

    சினிமா

    சிறு வயதில் இளையராஜாவை கவர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள்
    X

    சிறு வயதில் இளையராஜாவை கவர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிறு வயதில், `மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைக்கேட்டு பிரமித்துப்போன இளையராஜா, இவரைப்போல் உயர முடியுமா என்று எண்ணினார்.
    சிறு வயதில், `மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைக்கேட்டு பிரமித்துப்போன இளையராஜா, இவரைப்போல் உயர முடியுமா என்று எண்ணினார்.

    தனது இளமைப் பருவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "1963-ம் ஆண்டில், பம்பாயிலும் (தற்போதைய மும்பை) ஆமதாபாத்திலும் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து, இசை நிகழ்ச்சிகள்

    நடத்தினோம்.அப்போது, பம்பாய் நகரில் எங்கள் காலடி படாத இடமே கிடையாது. சிட்டி பஸ், டிராம், மாடி பஸ், அதிவேக ரெயில் - இவற்றில் எல்லாம் பயணம் செய்திருக்கிறோம். இப்போதுள்ள நெரிசல் அப்போது கிடையாது.

    மலபார் ஹில்ஸ் போகும் வழியில், லதா மங்கேஷ்கர் இருந்த வீட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவோம்.

    மெரின் டிரைவ், மெயின் டவுன் ஏரியா, தாதர், மாதுங்கா என்று எந்த இடம் போனாலும், ஒரே ஒரு பாடல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அது, "தாஜ்மகால்'' படத்தில், மதன் மோகன் இசை அமைத்த "ஜொவாதாக்கியாவோ நிபானா படேகா'' என்ற பாடல்தான். மகமத் ரபியும், லதா மங்கேஷ்கரும் பாடிய இந்தப்பாடல் எங்களை கிறங்க வைத்தது.

    தாராவியில் ஒரு தமிழ் நாடகத்திற்கும் இசை அமைத்தோம்.

    தாராவிக்குள் நுழையும்போதே கருவாடு வாடையும், மீன் நாற்றமும், வாந்தி வருகிற அளவுக்கு இருந்தன.

    இந்தப் பகுதியிலா தமிழர்கள் வாழ்கிறார்கள்! நìனைக்கும்போதே நெஞ்சம் பதைத்தது.

    "விதியே, விதியே!

    தமிழ்ச் சாதியை

    என் செய்ய நினைத்தாய்

    எனக் குரையாயோ?''

    - என்ற பாரதியின் பாடல் இதயத்தில் எதிரொலித்தது.

    தாராவியில் ஒருநாள் இருந்தோம். அவர்களோடுதான் உண்டோம்; உறங்கினோம்.

    பிறகு, ஆமதாபாத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு வாரம் தங்கினோம். மீண்டும் பம்பாய் வந்து, சென்னை மதுரை வழியாக பண்ணைபுரம் வந்தோம்.

    1964-ல் பிரதமர் நேரு மறைந்தபோது, "சீரிய நெற்றி எங்கே?'' என்று தொடங்கும் இரங்கல் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுத, அதை சீரணி அரங்கில் சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.

    இந்தச் செய்தியுடன், அந்த முழுப்பாடலையும் "தினத்தந்தி'' வெளியிட்டிருந்தது.

    இந்த சமயத்தில் நாங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். நேரு மறைவு காரணமாக, திருத்துறைப்பூண்டி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    அடுத்த நாள் வேதாரண்யத்தில் நிகழ்ச்சி. அதை நடத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கண்ணதாசன் எழுதியிருந்த பாடலை இசை அமைத்துப் பார்ப்போம் என்று எண்ணினேன். சீர்காழி கோவிந்தராஜன் அதை எப்படி பாடியிருப்பார் என்று எனக்குத் தெரியாது. நான் என் பாணியில் இசை அமைத்துப் பாடினேன்.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், பிரதமர் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேதாரண்யம் நிகழ்ச்சியை நடத்தி விடலாம் என்று கூறினார்கள்.

    அதுமட்டுமல்ல, நிகழ்ச்சியில் என்னை பாடவும் வைத்துவிட்டார்கள்.

    கச்சேரிகளில், பாடல் முடிந்தவுடன் அடுத்த பாடலுக்கு இடையே ஒரு சினிமா பாடல்களை வாசிப்பது வழக்கம். அதற்கெல்லாம் சில சமயம் கைதட்டல் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் இதற்காகப் பெருமைப்பட்டுக்கொண்ட நான், பிறகு, "இந்தக் கைதட்டல்கள் எல்லாம், பாட்டை யார் கம்போஸ் செய்தார்களோ அவர்களுக்கு அல்லவா போய்ச்சேர வேண்டும்'' என்று எண்ணத் தொடங்கினேன்.

    நாங்கள் இப்படிப் பாடுவதில் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாடல்கள்தான் அதிகமாக இருக்கும். என்னுடைய பாடல்களுக்கு மக்களிடம் என்றைக்கு அதிகம் கைதட்டல் கிடைக்கிறதோ அன்றைக்குத்தான் நான் பெருமையோ, கர்வமோ கொள்ள முடியும் என்ற திட்டவட்டமான முடிவுக்கு என் மனம் வந்துவிட்டது. எனவே, சினிமா பாடல்களுக்கு கைதட்டல் ஒலி எழும்போது, அதோடு சொந்தம் கொண்டாடாமல்,

    தனித்திருந்தேன்.அண்ணன் எம்.எஸ்.வி. பாடல்களுக்கு கைதட்டல்கள் விழும்போதெல்லாம் அவருடைய பாடல்களை மனம் ஆராயத் தொடங்கியது. அவருடைய ஆற்றல் என்னை வியக்க வைத்தது.

    அடேயப்பா! எவ்வளவு வித்தியாசமான - ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத ட்ïன்கள்? அதோடு இணைந்து வரும் அருமையான மிïசிக்!

    நாளுக்கு நாள் அண்ணன் எம்.எஸ்.வி. மீது மதிப்பும், மரியாதையும் கூடின.

    சிறு வயதிலேயே எங்கள் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட சி.ஆர்.சுப்பராமனிடம் எம்.எஸ்.வி. உதவியாளராக இருந்தார் என்றும், உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன் முதலிய மேதைகளிடம் பாடல் எழுதி வாங்கும் பணியில் இருந்தார் என்றும், எம்.எஸ்.வி. அவர்கள் பத்திரிகைகளுக்கு அளித்திருந்த பேட்டிகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.

    `இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் நமக்கு அமையுமா? இவர்களை நேரில் காணும் வாய்ப்பாவது கிட்டுமா?'' என்று என் உள்ளம் அலைமோதும்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    Next Story
    ×