என் மலர்

    சினிமா

    ரோஜா - செல்வமணி காதல்: 13 வருடம் காத்திருந்து மணந்தார்கள்
    X

    ரோஜா - செல்வமணி காதல்: 13 வருடம் காத்திருந்து மணந்தார்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.
    புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.

    காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-

    "தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.

    செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.

    ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.

    இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.

    காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே  பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.

    எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.

    ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.

    "உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.

    அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.

    செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.

    இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.

    ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.

    காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.

    ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).

    இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.

    அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.

    ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.

    ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.

    அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

    முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.

    இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.

    ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார்.
    Next Story
    ×