மும்பை, பிப்.6-
இந்தி நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது.
பல வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இருவரும் இப்போதுதான் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.
இதற்கு காரணம் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பதுதான் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் கரீனாகபூர் விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார். டீசர்ட் மேல் சால்வை போட்டு இருந்தார். வயிறு கர்ப்பவதிபோல் பெரிதாக இருந்தது. அதை சால்வை போட்டு மறைத்தார்.
இதை அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து இன்டர்நட்டில் வெளியிட்டு உள்ளார். வயிறு பெரிதாக இருப்பதற்கு காரணம் கர்ப்பம்தானா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் கரீனாகபூருக்கு நெருக்கமான ஒருவர் இதனை மறுத்தார். கரீனா கர்ப்பமாக இல்லை என்றும் புதுப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்றும் கூறினர்.
அப்படியெனில் இன்டர்நெட்டில் வெளியானது போலி படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படத்தை பார்த்து கரீனா கபூர் அதிர்ச்சியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.